இன்றைய நவநாகரீக யுகத்தில் விளைந்த நவீன வாழ்வியல் முறைகளும், விஞ்ஞான, தொழில்நுட்ப வளர்ச்சிகளும் மனித வாழ்வை பல வழிகளில் முன்னேற்றப் பாதைக்கு இட்டுச்சென்றுள்ளன என்பது உண்மை, எனினும் நோயற்ற வாழ்வை அவை நமக்குத் தந்துள்ளன என நம்மால் நிறைவு கொள்ள முடிவதில்லை காரணம், நாளும் பல்கிப்பெருகி வரும் எண்ணற்ற நோய்கள், (பிறந்த குழந்தைகளுக்கு பெயர் வைப்பதைப்போல அல்லவா விஞ்ஞானிகள், நாளும் ஒரு நோயைக் கண்டுபிடித்து புதிது புதிதாய் அவற்றுக்கு பெயர் வைத்துக் கொன்டு வருகின்றனர்) !!?
பண்டைய நாளில் இயற்கையோடு இணைந்து வாழ்ந்த நமது மூதாதையர்கள் கேள்விப்பட்டும் இருந்திரா எண்ணற்ற பல நோய்களுக்கு இன்று நாம் பதில் சொல்லிக் கொன்டிருக்கிறோம் என்பது வருத்தத்திற்குரிய உண்மை. பால் மணம் மாறா சிசுவிலிருந்து, பலகாலம் வாழ்ந்து விட்ட முதியோரும், பெண்கள், ஆண்கள் என அனைவரும் வயது வரம்பின்றி நோயால் பீடிக்கப்படுவது இக்காலத்தில் சர்வ சகஜமாகிவிட்டது.
நோய் என்றால் சாதாரண சளி, காய்ச்சல் முதற்கொன்டு உயிரைக் கொல்லும் இதயநோய், உடல் உறுப்புக்களை இழக்கச்செய்யும் சர்க்கரை நோய் (பெயர் என்னவோ கேட்பதற்கு இனிமையாகத்தான் இருக்கிறது, ஆனால் ஏற்படுத்தும் தீய விளைவுகள்!!!!), உடலை வலுவிழக்கச் செய்யும் ஆட்கொள்ளி நோயான எயிட்ஸ், உடலுக்கு உள்ளே ஊனை உருக்கும் புற்று நோய் என, இன்றைய காலத்து மாந்தர்களுக்கு சொந்தக்காரர்களாகி விட்டன எண்ணற்ற பல நோய்கள்
இன்றைய நாளில் மருத்துவம் மட்டுமென்ன சாதாரணமா ? அவர்கள் சிகிச்சையளிப்பதில் மட்டுமல்ல, தனியார் மயமென்ற பெயரில் மக்களிடம் உள்ள கொஞ்ச நஞ்ச பணத்தையும் வசூல் செய்துவிடுவதிலும் மகா கில்லாடிகள் ! :( இதில் ஆச்சரியம் என்னவென்றால் பல சமயங்களில் இவர்களது சிகிச்சை பலனளிக்காது நோயாளி மரித்துப் போனாலும் இவர்களுக்குச் செலுத்த வேண்டிய தொகையை, ஒரு சல்லிக்காசும் குறையாது வசூல் செய்து விடுவார்கள், என்னே ஒரு மனசாட்சி...! கேட்டால் இந்தச் செலவு, அந்தச் செலவு, என அவர்கள் காட்டும் பில்லில் தாதியர் கூடுதல் நேரம் வேலை செய்தனர் என்பதற்கும் வரவு வைக்கப்பட்டிருக்கும் ! சரி சரி போகட்டும், வியாபாரமாகிப்போன உலகில் இதுவெல்லாம் சகஜமப்பா என நம்மை நாமே தேற்றிக்கொள்ள வேண்டியதுதான், வேறு வழி ????
வசதி படைத்தவர்கள் நோய் பீடித்தால் மேற்குறிப்பிட்ட "அருமையான" வசதி படைத்த மருத்துவமனைகளை நாடி சிகிச்சை பெறுகின்றனர் (முற்றிலும் குணமடைவதும், அடையாததும் வேறு விசயம் ) வசதி குறைந்த மக்கள் ?
அவர்களை நோய் தாக்காமல் விட்டு விடுவதில்லையே ! அரசாங்க மருத்துவமனைகளில் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக நிறைந்திருப்பவர்கள் இவர்களே. ஏறக்குறைய இருந்தாலும் தற்காலிக நிவாரணிகள் இவை.
எனினும் இவற்றுக்கெல்லாம் நிரந்தர நிவாரணி ஒன்று உண்டு, அதுவே இன்று நமது தலைப்பில் காணும் "அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை "!!!!
இந்தச் சிகிச்சை வழி கத்தியின்றி இரத்தமின்றி, மருந்து மாத்திரைகளின்றி, மருத்துவ சிகிச்சைகளின்றி, உணவுக்கட்டுப்பாடுகள் ஏதுமின்றி நமக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை நாமே முழுமையாக விடுவித்துக்கொள்ள முடியும், நோயின் பிடியிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும், நமது இரத்தத்தினை நாமே சுத்திகரித்துக்கொள்ள முடியும். நம்மை ஆரோக்கியமாகவும், இளமையாகவும், அழகாகவும் வைத்துக்கொள்ள இயலும். இதற்கு அதிகமான செலவுகளோ, சிரமங்களோ கிடையாது. தேவையெல்லாம் முழு ஈடுபாட்டுடன் சில வழிமுறைகள் பின்பற்ற வேண்டியதேயாகும்.
இதையெல்லாம் கேள்விப்பட்டதும் மிக ஆச்சரியமாகவே இருந்தது, ஆனால் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் சொற்பொழிவில் இவையனைத்தும் சாத்தியமான உண்மைகள் என்பது, தெளிவாக விளங்கியது. " நிறைகுடம் தளும்பாது" என்பதற்கு உதாரணமாக விளங்குகிறார் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள். பகட்டு, படாடோபம் ஏதுமின்றி மிகவும் எளிமையாக காட்சியளிக்கும் இவர், "நான் உங்கள் சகோதரன்" எனும் முகவரியோடு தனது சொற்பொழிவைத் துவங்கி, இன்றைய காலக்கட்டத்தில் மனிதர்களின் ஆரோக்கியக் கேடுகளுக்கான தீர்வை தெளிவுற விளக்குகிறார். இந்த சிகிச்சை குறித்த மேலும் பல தகவல்களை யாவரும் அறியும் பொருட்டு, இணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
இந்த சிகிச்சையில் சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் பேசுவதை முழுமையாக செவிமடுத்து, அவர் குறிப்பிடும் சில எளிமையான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும், ஒருமுறை மேற்கொன்ட சிகிச்சை வாழ் நாள் முழுக்க நலமளிக்க வல்லதாகும். .
சகோதரர் ஹீலர் பாஸ்கர் அவர்கள் உடல் நலம், நோய்கள் மீதான விழிப்புணர்வின் அவசியம், நோயிலிருந்து விடுபடும் வழிமுறைகள் என பல விசயங்களை எளிமையான முறையில் சிறப்பாக தெளிவுபடுத்தினார், அவையனைத்தையும் இங்கே பதிவிடல் சற்றே சிரமமாகையால், முக்கியமான சில குறிப்புகள் மட்டும் இங்கே பதிவிடப்படுகிறது.
செவிவழி தொடு சிகிச்சை என்றால் என்ன?
உலகத்தில் இதுவரை எந்த நோயாக இருந்தாலும் மருந்து மாத்திரை, தியானம்,யோகா, மூச்சு பயிச்சி, அக்குபஞ்சர், ரேயிக்கி, மூலகை, முத்திர, நியூரேதெரப்பி, தொடு வர்மம், மற்றும் பல வழிகழில் சிகிச்சை செய்து வருகிறார்கள்.
ஆனால் இந்த செவி வழிதொடு சிகிச்சை என்பது மேலே சொல்லப்பட்ட எந்த முறையும் இல்லை.
உப்பு, புளி, காரம் குறைக்கத் தேவையில்லை, பத்தியமும் இல்லை, வாக்கிங் தேவையில்லை. சர்க்கரை மற்றும் அனைத்து நோயாழிகளும் சிகிச்சை முடிந்த அடுத்த வினாடி முதல் எல்லா இனிப்புகள், பழங்கள், எண்ணெய் பலகாரங்கள், மனதுக்குப் பிடித்த எல்லா உணவுகளையும் வாழ்க்கை முழுதும் தாராளமாக சாப்பிடலாம்.
ஒரே ஒரு முறை சிகிச்சை எடுத்துக் கொண்டால் போதும் இரண்டாவது முறை சிகிச்சை எடுக்க அவசயமில்லை.
இந்த சிகிச்சை எந்த மதமும் சம்பந்தப்பட்டது அல்ல. எனவே எல்லா மதத்தினருக்கும் பொருந்தும்.
இந்த செவிவழி தொடு சிகிச்சையில் நோய்களுக்கு எந்த நோயாக இருந்தாலும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் 4- மணி நேரம் பேசுவதை தொடர்ந்து கேட்க வேண்டும். அவர் பேசும் வார்த்தைகள் நோயாழியின் காது(செவி) வழியாகச் சென்று மருந்தாக வேலை செய்து நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.
சிகச்சை பெற்றுக்கொள்வது எப்படி?
வழி-1. (இந்தியா – 9944221007, 9842452508) (மலேசியா – போன்-012-6646107) என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்கள் ஊரில் இலவச சிகிச்சை நடக்கும் நாள் மற்றும் இடத்தை தெரிந்து கொண்டு நேரில் வரலாம்.
வழி-2. நேரில் வரமுடியாத நோயாளிகளும் மருத்துவத் துறையில் உள்ளவர்களும் டிவிடி-ஐ விபிபி அஞ்சல் மூலம் பெற்று உங்கள் வீட்டில் இருந்தபடியே ச்கிச்சை பெறலாம்.
வழி -3 500 பேர் ஒன்று சேர்ந்து அழைத்தால் உங்கள் இடத்திற்கே வந்து இலவச சிகிச்சை அளிகப்படும் (வீடு, ஆசிரமம், அப்பார்ட்மெண்ட், கல்லூரி, பள்ளி, முதியோர் இல்லம், அலுவலகம்)
வழி-4 முழு சிகிச்சை முறையை www.anatomictherapy.org என்ற இணைய தளத்தில் இலவசமாக டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
அனாடமிக் செவிவழி தொடு சிகிச்சை - இயற்கையுடன் இணைந்த வாழ்வு
உணவு (மண்)
*பசித்தால் மட்டுமே உண்ணவேண்டும்
*உண்பதற்கு அரைமணி நேரம் முன்பும் பின்பும் நீர் அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் மட்டுமே சிறிதளவு அருந்தலாம்.
*உண்ணும் பொழுது கண்களை மூடி, இதழ்களை மூடி, இதழ் பிரிக்காமல் மென்று கூழ் போல் அரைத்து பின் விழுங்க வேண்டும்.
*தொலைகாட்சி பார்த்தல், புத்தகம் படித்தல், செல்போன் பேசுதல், கால்களை தொங்கவிடுதல் ஆகிய கவனச் சிதறல்கள் உண்ணும் நேரத்தில் கூடாது.
*முடிந்தவரை வீட்டு உணவு ( நம்மேல் அக்கரை கொன்டவர்கள் சமைத்த உணவை ) உட்கொள்ளவும்.
காற்று (வாயு)
*கொசுவர்த்தி கட்டாயம் உபயோகிக்கக்கூடாது. கொசு வலை பயன்படுத்திக் கொள்ளலாம்
*எந்நேரமும் நல்ல காற்று உள்ளே வருவதற்கும், அசுத்தக்காற்று வெளியேறுவதற்கும் ஏற்புடைய வசதியான காற்றோற்றம் நமது வாழ்விடத்தில் அமைந்திருப்பதை உறுதிபடுத்திக்கொள்ளவும்.
ஓய்வு/தூக்கம் (ஆகாயம்)
*வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது.
*டீ, காபி குடிக்கக்கூடாது.
*தூக்கத்திற்கும், ஓய்விற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
*இரவில் பல்துலக்கி படுத்தால் நன்றாக தூக்கம் வரும்.
*தலையில் உச்சிக்கும், சுழிக்கும் நடுவில் மசாஜ் செய்தால் நன்றாக உறக்கம் வரும்.
உழைப்பு ( நெருப்பு )
*A/C (குளிர்சாதன வசதி) பயன்படுத்துதல் கூடாது.
*தினமும் உடலில் உள்ள அனைத்து இணைப்புகளுக்கும் பயிற்சி
அளிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நிண நீர் ஓட்டம் நன்றாக இருக்கும்.
*இரத்த ஓட்டத்திற்கு இருதயம் உதவும், ஆனால் நிண நீர் ஓட்டத்திற்கு உடல் உழைப்பு ஒன்றே உதவிடும்.
தண்ணீர் [நீர்]
மினரல் வாட்டர் குடிக்கக்கூடாது
தண்ணீரைக் காய்ச்சி
குடிக்கக்கூடாது
தண்ணீரை சப்பி சப்பி தான் குடிக்க வேண்டும்
தண்ணீர் [நீர்]
மினரல் வாட்டர் குடிக்கக்கூடாது
தண்ணீரைக் காய்ச்சி
குடிக்கக்கூடாது
தண்ணீரை சப்பி சப்பி தான் குடிக்க வேண்டும்
No comments:
Post a Comment