Saturday, November 16, 2013

கணினி மூலம் சேவைகள் பெறுவதில் தமிழகம் 13வது இடம்








தேசிய அளவில், அரசு சேவைகளை, கணினி மூலம் பெறும் மாநிலங்களில், தொடர்ந்து, குஜராத் முதல் இடத்தை பிடித்து வருகிறது. கடந்த மாதம், ஒன்பதாவது இடத்தில் இருந்த தமிழகம், இம்மாதம், மேலும் பின்தங்கி, 13வது இடத்தை பிடித்துள்ளதாக, மத்திய அரசின், இ - தால் புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வருகிறது.


மின்னணு சேவை: @@தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக, மக்கள் இருந்த இடத்தில் இருந்தே, அரசின் பல்வேறு சேவைகளை பெற முடியும். இந்த வசதிக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் செய்து உள்ளன. இதன் மூலம், சம்பந்தப்பட்ட அலுவலக வாயில்களில் கால்கடுக்க காத்திருக்க வேண்டிய அவசியம் குறைந்துவிட்டது. குறிப் பாக, கட்டணங்கள் செலுத்துதல், பல்வேறு திட்டங்களுக்கு விண்ணப்பித்தல் போன்றவை, கணினி வாயிலாக, சம்பந்தப்பட்ட துறையின், இணைய தளங்களில் இப்போது அதிகமாக கிடைக்கப் பெறுகின்றன. ஆனால், இந்த வசதியை பயன்படுத்துவோர் எண்ணிக்கையில், தமிழகம் மிகவும் பின்தங்கியுள்ளது. அதே நேரம், குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, மத்திய பிரதேசம், உத்தர பிரதேச மாநிலங்களில் அதிகளவில், மின்னணு சேவை பயன்படுத்தப் பட்டு வருகிறது.

28 துறைகள்: @@குறிப்பாக, போக்குவரத்து, சுகாதாரம், கட்டணம் செலுத்து தல், தேர்தல் துறை, காவல் என, 28 துறைகளில் இருந்து சேவைகள் பெற்ற வகையில், கடந்த ஜனவரி முதல் நவ.,14ம் தேதி, மாலை, 4:00 மணி நிலவரப்படி, 123 கோடி முறை, மின்னணு சேவை பயன்படுத்தப் பட்டு உள்ளது. இதில், குஜராத்தைச் சேர்ந்த வர்கள், 30.21 கோடி முறை பயன்படுத்தி உள்ளனர். அடுத்தடுத்த இடங்களில், மத்திய பிரதேசம், 26.19; மகாராஷ்டிரா, 18.51; ஆந்திரா, 16.31 மாநிலங்கள் உள்ளன. தமிழகம் (1.35 கோடி ), 13வது இடத்தில், உள்ளது.

12 பிரிவுகள்: @@கடந்த மாதம், 3ம் தேதி, தமிழகத்தில், 1.15 கோடி முறை, மின்னணு சேவை பயன்படுத்தப்பட்டிருந்தது. தேசிய அளவில், 28 சேவைகள் இருக்கும் நிலையில், தமிழகத்தில், சான்றிதழ்கள், வணிக வரி, கட்டணங்கள் செலுத்துதல், சமூக நலன் மற்றும் ஓய்வூதியம், போக்குவரத்து, கல்வி, குறைதீர்ப்பு, சுகாதாரம், மின்னணு கொள்முதல், தொழிற்சாலை மற்றும் வர்த்தகம், பாஸ்போர்ட் மற்றும் விசா சேவை, இதர சேவைகள் உள்ளிட்ட, 12 பிரிவுகளை மட்டுமே பயன்படுத்துகிறது. பயன்படுத்தப்படும் பிரிவுகளிலும், மிகக் குறைந்த அளவிலான சேவைகளை மட்டுமே தமிழக மக்கள் நுகர்ந்துள்ளனர். பயன்பாட்டை பொறுத்தவரை, போக்குவரத்துத் துறையின் சேவை களை, 55.19 லட்சம் பேரும், வணிகவரித் துறை சேவைகளை, 51.23 லட்சம் பேரும் அதிகப்படியாக பயன்படுத்தி உள்ளனர். கட்டணம் கட்டும் சேவையை இதுவரை, நேற்றைய நிலவரப்படி, மூவர் மட்டுமே பயன்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில், வணிகவரித் துறை, போக்குவரத்துத் துறை, காவல், சமூக நலத்துறை, வருவாய்த் துறை, நகராட்சித் துறை என, 10 துறைகளில் தற்போது முழுமையாக, கணினி பயன்பாடு உள்ளது. இந்த துறைகளில், ஒரு சிலவற்றில் மட்டுமே பயன்பாடும் அதிகமாக உள்ளது. இந்நிலையில், மின்னணு நிர்வாகத்தை மேம்படுத்தும் வகையில், இந்தாண்டு, 10 கோடி ரூபாயை முதல்வர் ஒதுக்கி உள்ளார். மின்னணு நிர்வாகத்தை மேம்படுத்த நினைக்கும் துறைகள், துறை தொடர்பாக, மென்பொருளை தயாரித்து, இதற்காக அமைக்கப்பட்டுள்ள நிதியத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அதை பரிசீலிக்கும் நிதிய குழு அதிகாரி கள், மென் பொருள் பயன்பாட்டை அறிந்து, அதன் அடிப்படையில், நிதியை ஒதுக்கு வார்கள் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

குறைபாடு ஏன்?@@ கல்வியறிவில் முன்னேறிய மாநிலமாக தமிழகம் கருதப்பட்டாலும், இச்சேவை குறைபாடு ஏன், இதை முற்றிலும் அகற்றி, அதிக பயன்பாட்டிற்கு மின்னணு சேவை வர எது முக்கிய தடை என்று கண்டறிய வேண்டும். கடந்த ஓராண்டில், அதிக அளவு மின் தட்டுப்பாடும், மின்னணு சேவையை பல்வேறு அரசு நிறுவனங்கள் முற்றிலும் பயன்பாட்டில் அமல் படுத்த முடியாததாக இருந்திருக்கிறது.

No comments:

Post a Comment