ஸ்ரீகாந்த் தற்போது நடித்துக் கொண்டிருக்கும் படம் பாகன். சிறந்த பொழுதுபோக்குப் படமாக உருவாகி வரும் இப்படத்தில் குண்டு வெடிக்கும் சம்பவம் ஒன்று படமாக்கப்பட்டது.
அப்போது டூப் போடாமல் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீகாந்த், பாதுகாப்பிற்காக போடப்பட்டிருந்த கயிறு அறுந்தது. எனினும் நூலிழையில் ஸ்ரீகாந்த் உயிர் தப்பினார்.இது குறித்து அவர் கூறுகையில், நான் நடித்த எல்லா படங்களிலுமே ஏதாவது ஒரு விபத்தை சந்தித்துவிடுவேன். எனக்கும் தீக்கும் அவ்வளவு நெருங்கிய தொடர்பு. என்னை விபத்து பையன் என்றே எல்லோரும் கூப்பிடலாம் என்றார் சிரித்தபடி.குண்டு வெடிக்கும் போது அப்பகுதியில் இருந்து என்னை தூக்குவதற்காக கட்டப்பட்ட கயிறு குண்டு வெடிப்பதற்கு முன்பே அறுந்துவிட்டது. அங்கிருந்து நான் எப்படியோ தப்பித்து வெளியேறவும், குண்டு வெடிக்கவும் சரியாக இருந்தது. ஆனால் கடைசி வரை படக்குழுவினருக்கு கயிறு அறுந்தது தெரியாது. குண்டு வெடிக்கும் போது கயிறை படக்குழுவினர் இழுத்த போதுதான் அவர்களுக்கு தெரிந்தது என்றார் விபத்து பற்றி விளக்கிய ஸ்ரீகாந்த்.டூப் ஆர்டிஸ்டுகளுக்கும் குடும்பம் உள்ளது, அவர்களுக்கும் இது ஆபத்துத்தான் என்று உணர்ந்தே நானே நடிக்க முடிவு செய்தேன் என்கிறார் நமது ஹீரோ ஸ்ரீகாந்த்.
No comments:
Post a Comment