Monday, April 16, 2012

ஐஸ்வர்யா ராய்க்கு கிடைச்ச 20 கோடி சான்ஸ்!













கல்யாண் ஜுவல்லர்ஸின் புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யா ராய் பச்சன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதற்காக அவர் பெறவிருக்கும் சம்பளம் ரூ. 20 கோடி ஆகும்.
கல்யாண் ஜுவல்லர்ஸின் பிராண்ட் அம்பாசிடராக வெகுகாலமாக இருப்பவர் முன்னாள் பிரபஞ்ச அழகி சுஷ்மிதா சென். அவரது ஒப்பந்தம் விரைவில் முடிகிறது. இதையடுத்து புதிய பிராண்ட் அம்பாசிடராக ஐஸ்வர்யாவை தேர்வு செய்துள்ளனர் கல்யாண் ஜுவல்லர்ஸ். சுஷ்மிதா சென் படங்களில் நடிக்கவில்லை. விளம்பரப் படங்களில் மட்டுமே வருகிறார். ஆனால் ஐஸோ படம், விளம்பரம் என்று வரும் வாய்ப்பையெல்லாம் பயன்படுத்திக் கொள்கிறார். பிரசவத்திற்கு பிறகு தற்போது மெதுவாக பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள ஆரம்பித்துள்ளார். விரைவில் இந்தி படமொன்றில் நடிக்கப்போகிறார் என்றும் கூறப்படுகின்றது. இந்நிலையில் தான் ஐஸூக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. 2 ஆண்டு ஒப்பந்தத்திற்கு ஐஸூக்கு கிடைக்கும் சம்பளம் கொஞ்ச, நஞ்சமல்ல ரூ.20 கோடி ஆகும். வருடத்திற்கு ரூ.10 கோடி சம்பளம். 

No comments:

Post a Comment