திரிஷா - வருண் மணியன் திருமணம் நின்று போனதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணம் நின்றதற்கு தனுஷ் தான் காரணம் என்று
பேசப்படுகிறது.
தனுஷுக்கும், வருண் மணியணுக்கும் ஏற்கனவே கருத்து வேறுபாடு நிலவும் நிலையில், திரிஷா - வருண் மணியன் திருமண நிச்சயதார்த்த விழாவுக்கு தனுஷ் வந்திருந்தாராம். இது வருண் மணியணுக்கு எரிச்சலை தந்ததாம். இதற்காக திரிஷாவிடம் வருண் வாக்குவாதத்தில் ஈடுபட, தனுஷ் எனது நண்பர். ஆகையால் நான் அவரை அழைக்கத்தான் செய்வேன் என்று கூலாக பதில் அளித்தாராம் திரிஷா.
இதனால் மேலும் கோபமடைந்த வருண் மணியன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டாராம். இந்த நேரத்தில் இருவருக்குமிடையே நடக்கும் மோதலை சமாதானப்படுத்த வருண் மணியன் தந்தை முன்வந்தாராம். அதற்கு திரிஷா, நீங்கள் இதில் தலையிடவேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
இந்த மோதல் தான் இருவரின் பிரிவுக்கும் காரணம் என்றும், நிச்சயதார்த்த விழாவுக்கு பின் ஒரு நாள் கூட இருவரும் சேர்ந்து எங்கும் போகவில்லை எனவும் கூறப்படுகிறது. எனினும் திரிஷாவோ அல்லது வருண் மணியனோ யாராவது ஒருவர் மனம் திறந்து பேசினால் தான் இருவரின் பிரிவுக்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவரும்.
No comments:
Post a Comment