Wednesday, May 06, 2015

இயக்குநர் மணிரத்னத்திற்கு நெஞ்சுவலி

 



பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக தில்லி தனியார் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ஓ காதல் கண்மணி திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது.  இதனையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
எனினும் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்  "ராவணன்' படத்தின் படப்பின் போது மணிரத்னத்துக்கு லேசான நெஞ்சுவலி எற்பட்டது. அப்போது அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றார்.

No comments:

Post a Comment