Wednesday, January 11, 2012

அண்ணாமலை பல்கலையில் டிஜிட்டல் பப்ளிஷிங் படிப்பு

அண்ணாமலை பல்கலைக் கழகம் டிஜிட்டல் பப்ளிஷிங் எனப்படும் கணினி வழி பதிப்புத்துறை சார்ந்த 3 ஆண்டுகளைக் கொண்ட இளநிலை பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கல்வி உதவித் தொகையுடன் வேலை வாய்ப்பை அளிக்கும் ஆன்லைன் வழியாக கற்றுத்தரும் டிஜிட்டல் பப்ளிஷிங் என்ற புதிய பட்டப்படிப்பை இந்த கல்வியாண்டில் இருந்து தொடங்கியுள்ளது.
இந்த படிப்பில் ஒரு ஆண்டுக்கு 40 மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள். அந்த 40 மாணவர்களுக்கும் 3 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணமான ரூ.70 ஆயிரத்தையும் ஜோவ் இந்தியா என்னும் பன்னாட்டு நிறுவனமே செலுத்தி விடும். மேலும், படிக்கும் காலத்திலேயே வேலை வாய்ப்பினையும் வழங்க உள்ளது.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட இந்த படிப்பில் சேர்வதற்கான தகுதித் திறன் தேர்வு ஆன்லைனிலேயே நடத்தப்படும். தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் நேர்காணல் மூலம் சேர்க்கை பெறுவார்கள். தகுதித் தேர்வில் கணிதம், ஆங்கிலம் ஆகியப் பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.
விண்ணப்பத்தை http://www.dpup.in/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கொள்ளலாம். 9710938631, 9710938632 என்ற எண்களில் தொடர்பு கொண்டு மேலும் விவரங்களை அறிந்து கொள்ளலாம்.
இப்படிப்பில் சேரும் மாணவர்களுக்கு ஜோவ் இந்தியாவில் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். முதலாமாண்டு மாணவர்களுக்கு ரூ.6 ஆயிரமும், 2ம் ஆண்டில் ரூ.8. ஆயிரமும், 3ம் ஆண்டில் ரூ.10 ஆயிரமும் மாதந்தோறும் உதவித் தொகையாக அளிக்கப்படும். படிப்பை முடித்தவர்களுக்கு பன்னாட்டு நிறுவனத்திலேயே நிரந்தர வேலையும் அளிக்கப்படும்.

No comments:

Post a Comment