Tuesday, December 27, 2011

ரூபாய் சின்னத்துடன் புதிய நோட்டு வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி

ரூபாய் சின்னத்துடன் கூடிய, 500 ரூபாய் விரைவில் வெளியிடப்பட உள்ளது. காந்திஜி உருவம் பொறிக்கப்பட்ட மற்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சுப்பாராவ் கையொப்பமிட்ட 500 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.
 டாலர், யூரோ, பவுன்ட் போன்ற, தமிழகத்தை சேர்ந்த உதயகுமார் என்ற ஐ.ஐ.டி., மாணவர், ரூபாய்க்கும் சின்னத்தை வடிவமைத்து கொடுத்தார். கடந்த ஆண்டு ஜூலை இந்த ரூபாய் சின்னத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ரூபாய் சின்னம் பொறிக்கப்பட்ட நாணயங்கள் புழக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.




"ஆயிரம், 500, 100, 10 ரூபாய் நோட்டுகளிலும் ரூபாய் சின்னம் பதிக்கப்பட்டு வெளியிடப்படும், என ரிசர்வ் வங்கி அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து ரூபாய் சின்னம் பொறிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கள் விரைவில் வெளிவர உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தற்போது சில்லறை தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் என்ற வகையில் ஒவ்வொருவருக்கும் 95 நாணயங்கள் கிடைக்கும் வகையில், இந்த சில்லறை நாணயங்களை உற்பத்தி செய்து புழக்கத்தில் விடப்பட்டிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது.

No comments:

Post a Comment