Wednesday, May 09, 2012

காற்று எரிபொருளில் இயங்கும் கார்: வெற்றிகரமாக சோதனை செய்த டாடா

















காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் 2 கான்செப்ட் கார்களை டாடா மோட்டார்ஸ் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.


நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அடுத்த தலைமுறைக்கு ஏற்ற வகையில், மாற்று எரிபொருள் தொழில்நுட்பத்தில் இயங்கும் கார்களை வடிவமைப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

எலக்ட்ரிக் தவிர்த்து மாற்று எரிபொருள் கார்களை உருவாக்கும் வகையில், கடந்த 2007ம் ஆண்டு ஐரோப்பிய நிறுவனமான எம்டிஐ நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டன. 2 கட்டமாக புதிய காரை வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

இதன்படி, காற்றை எரிபொருளாக கொண்டு இயங்கும் கான்செப்ட் மாடல் எஞ்சின் தயாரிக்கப்பட்டு, அந்த எஞ்சின் தற்போது 2 டாடா கார்களில் பொருத்தி வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2ம் கட்டமாக இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வணிக ரீதியில் காற்று சக்தியில் இயங்கும் காரை வடிவமைக்கும் பணிகள் துவங்கப்பட உள்ளன.

No comments:

Post a Comment