Friday, May 04, 2012

பி.எப். சேமிப்புக்கு வட்டி உயர்வு





தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதிக்கு 2010-11-ம் ஆண்டுக்கு 9.5 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது. இது கடந்த ஆண்டுக்கு (2011-12) 8.25 சதவீதமாக குறைக்கப்பட்டது. நடப்பு நிதி ஆண்டுக்கு (2012-13) இது 8.6 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்று மத்திய தொழிலாளர் நல மந்திரி மல்லிகார்ஜுன கார்கே நேற்று டெல்லி மேல்-சபையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில் தெரிவித்தார்.

"தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி சிறப்பு சேமிப்பு திட்டங்களில் டெபாசிட் செய்யப்படுகிறது. அதில் இருந்து கிடைக்கும் வருமானம் குறைந்ததால் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இதில் கூடுதல் குறைவு என்ற பேச்சுக்கே இடமில்லை. கிடைக்கும் வருமானத்தில் இருந்துதான் வட்டி கொடுக்கிறோம். அடுத்த முறை 8.6 சதவீதமாக உயர்த்தி கொடுக்கப்படும்" என்று அப்போது அவர் கூறினார்.

No comments:

Post a Comment