Friday, May 04, 2012

ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்!











 ஈராக் நாட்டைச் சேர்ந்த அப்துல் ரஹ்மான் நயீப் அல் ஒவைதி என்ற 22 வயது இளைஞர் ஒரே ஒரவில் தமது 2 காதலிகளை கரம்பிடித்து கலகல திருமணம் செய்துகொண்டிருக்கிறார். இதற்காக இருவருக்கும் தலா 2000 டாலருக்கும் மேல் அவர் வரதட்சணையும் கொடுத்துள்ளாராம்.


ஈராக்கின் திக்ரிக் அருகே உள்ள அல் லக்லக் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல் ரஹ்மான். விவசாயியான இவர் இந்தார், சவூத் ஆகிய இரு பெண்களைக் காதலித்து வந்தார். இருவரும் அப்துல் ரஹ்மானுக்கு உறவினர்கள்தான்.

இருவரையும் காதலித்த அவர் இருவரையும் மணக்கவும் முடிவு செய்தார். ஆனால் உறவினர்களிடையே கடும் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும் அதைப் பொருட்படுத்தாத ரஹ்மான், தனது இரு காதலிகளின் ஒப்புதலையும் பெற்றார். பின்னர் இருவரையும் மணக்கப் போவதாக அறிவித்தார்.இரு பெண்களும் ஒப்புக் கொண்டு விட்டதால் உறவினர்களும் சரி என்று கூறி விட்டனர்.

இதையடுத்து கடந்த மாதம் நடந்த திருமண நிகழ்ச்சியில் ஒரே நாளில் இருவரையும் கரம்பிடித்தார் ரஹ்மான். இந்த திருமணத்தில், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் பங்கேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தியனர்.

ஆனால் தமது காதலிகள் இருவரையும் சமமாக நடத்துவேன் என்று ரஹ்மான் உத்தரவாதம் கொடுத்ததால் இரு பெண்களின் ஒப்புதலுடனேயே திருமணம் செய்வதாகவும் ரஹ்மான் கூற ஒருவழியாக சமாதானம் அடைந்திருக்கின்றனர்.

இந்தக் கல்யாணத்தின்போது இரு காதலிகளுக்கும் தலா 2140 டாலர் வரதட்சணைப் பணமாக கொடுத்துள்ளார் ரஹ்மான்.

No comments:

Post a Comment