
ஜப்பான் அணிக்கு எதிரான இரண்டாவது ஹாக்கி போட்டியில், இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில், இந்தியா, ஜப்பான் அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடர் நடக்கிறது. முதல் போட்டி ‘டிரா’ ஆனது. நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. ஆட்டத்தின் 27வது நிமிடத்தில் இந்தியாவின் யுவராஜ் வால்மிகி கொடுத்த பாஸை உத்தப்பா கோலாக மாற்றி, 1–0 என முன்னிலை பெற்றுத் தந்தார். தொடர்ந்து அசத்திய இந்திய அணிக்கு 48வது நிமிடத்தில் தரம்வீர் சிங் ஒரு கோல் அடித்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ஜப்பான் வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில், இந்திய அணி 2–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 1–0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி நாளை நடக்கிறது.
No comments:
Post a Comment