Wednesday, August 22, 2012

மரத்தை வேருடன் நட்டு வளர்க்கும் முயற்சி

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டில் ரயில்வே சுரங்க பாலம் கட்டும் பணிக்காக, 75 வயதான மரங்களை வெட்ட வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அம்மரங்களை வெட்டிச்சாய்க்காமல், வேருடன் பெயர்த்தெடுத்து மற்றொரு இடத்தில் நட்டு வளர்க்கும் முயற்சி, நாளை (23ம் தேதி) நடைபெறுகிறது.திருப்பூர் ஊத்துக்குளி ரோடு டி.எம்.எப்., மருத்துவமனை அருகே ரயில்வே சுரங்க பாலம்
பணிக்கு, 75 ஆண்டு பழமை வாய்ந்த மரங்கள் இடையூறாக உள்ளன. அம்மரங்களை வெட்ட, நெடுஞ்சாலைத்துறை திட்டமிட்டிருந்தது. நகரின் வளர்ச்சிக்கு சாட்சியாக, பின்னி பிணைந்து வளர்ந்துள்ள, 75 வயதான அரச மரம் மற்றும் வேப்ப மரம் அழிவதை தன்னார்வலர்கள் விரும்பவில்லை.
"நிப்ட்-டீ' கல்லூரி நிர்வாகம், தாய் மண்ணுடன் மரத்தை வேருடன் பெயர்த்தெடுத்து, கல்லூரி வளாகத்தில் நட்டு வளர்க்க திட்டமிட்டுள்ளது. இதற்காக, துறை வாரியாக அனுமதி பெறப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு இன்று (22ம் தேதி) நடைபெறுவதாக இருந்தது. மரத்தை பெயர்த்தெடுத்து, "நிப்ட்-டீ' கல்லூரியில் நடும் வரை, மின் சப்ளை துண்டிக்கப்பட வேண்டும்.இதற்காக, மின்வாரியத்திடம் அனுமதி கோரியபோது, மரம் வளர்ந்துள்ள பகுதியிலும், மீண்டும் நட உள்ள பகுதியிலும், வரும் 23ம் தேதி (நாளை) மாதாந்திர மின் தடை செய்யப்படுகிறது.

இந்நிகழ்வுக்காக இன்றும் (22ம் தேதி), மாதாந்திர தடையாக நாளையும் மின் தடை செய்தால், பொதுமக்கள் பாதிக்கப்படுவர். அதனால், அந்நிகழ்ச்சியை, 23ம் தேதி ஒத்திவைக்குமாறு மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மரத்தை பெயர்த்தெடுத்து, மீண்டும் நடும் நிகழ்ச்சி நாளை நடைபெற உள்ளது.

No comments:

Post a Comment