Wednesday, May 02, 2012

தண்ணீரில் மிதந்தபடியே யோகாசனம் செய்த 92 வயது முதியவர்











 தூத்துக்குடியில், உடல் ஆரோக்யத்திற்காகவும், நீச்சல் கற்கவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், 92 வயது முதியவர், தண்ணீரில் மிதந்தபடியே யோகாசனம் செய்தார். தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அடுத்த
செம்புலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சொர்ணலிங்கம்,92. முன்னாள் கிராம முன்சிப்பான இவர், கேரளாவில் கடை வைத்திருந்தார். அங்கு, ஆற்று நீரில் யோகாசனம் கற்றுக்கொண்டார். ஆறு, குளம், கடலில் பலர் மூழ்கி இறப்பதை தடுக்க, நீச்சல் கற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், உடல் ஆரோக்யத்திற்காகவும், இவர், நேற்று தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கான, தருவைமைதான நீச்சல் குளத்தில், தண்ணீரில் மிதந்தபடியே பல்வேறு யோகாசனங்களை செய்துகாட்டினார். நீச்சல் பயிற்சியும் கற்றுக்கொடுத்தார். இதில், பள்ளி மாணவ, மாணவியர் பலர் பயன்பெற்றனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் தாசன், நீச்சல் பயிற்றுநர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

No comments:

Post a Comment