
சைபர் குற்றங்களை தடுக்கும் பொருட்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தமிழ்நாடு காவல்துறை சார்பில் குறும்படம் ஒன்று உருவாக இருக்கிறது
. இதில் நடிகர் கார்த்திக் நடிக்க உள்ளார். குறிப்பாக ஆன்-லைன் மோசடிகளை தடுக்கும் பொருட்டு, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாடு காவல்துறை சார்பாக இந்த குறும்படம் தயாரிக்கப்படுகிறது. 5 நிமிடங்கள் ஓடும் இந்த குறும்படத்தில் ஆன்-லைன் மோசடிகள் மற்றும் பிற மோசடிகள் எப்படி நடக்கிறது என்பதை பற்றி கார்த்தி விளக்கி நடிக்க உள்ளார்.
No comments:
Post a Comment