
இந்திய நிறுவனங்கள் மொபைல் தயாரிப்பில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. செல்கான் என்ற இந்திய நிறுவனம் புதிய ஆன்ட்ராய்டு வசதி கொண்ட ஏ-99 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது ஆன்ட்ராய்டு 2.3வி இயங்குதளத்தில் இயங்கும்
. இது பார்த்தவுடன் தொட தூண்டும் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன்.
வீடியோ காலிங், 3ஜி போன்ற தொழில் நுட்ப வசதிகளையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டதால், தேவையான புதிய அப்ளிக்கேஷன்களை ஆன்ட்ராய்டு மார்கெட் மூலம் எளிதாக டவுன்லோட் செய்து கொள்ளலாம். பிரவுசிங் வசதியை கொடுக்க வைபை தொழில் நுட்பமும் உள்ளது.
32ஜிபி வரை இதன் மெமரி வசதியை விரிவுபடுத்தி கொள்ளலாம். இதே போன்ற தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் சர்வதேச சந்தையில் 20,000 விலை கொண்டதாக இருக்கிறது. ஆனால் சிறந்த வசதி கொண்ட இந்த செல்கான் ஏ-99 ஸ்மார்ட்போன் ரூ.8,299 ஒட்டிய விலையில் கிடைக்கும். இது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஸ்மார்ட்போனை பெரும் சிறந்த வாய்ப்பு என்று கூறலாம்.
No comments:
Post a Comment