சென்னை : ரஜினி நடிக்கும் ‘கோச்சடையான்’ ஷூட்டிங் வரும் 19ம் தேதி தொடங்குகிறது. ரஜினியுடன் சினேகா நடிக்கும் காட்சிகளை படமாக்குகிறார் சவுந்தர்யா. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருந்த ‘ராணா’ ஷூட்டிங் அவரது உடல்நிலை காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதில் அதிக எடையுடன் கூடிய உடை அணிதல் மற்றும் கத்தி சண்டை போன்ற ரிஸ்கான காட்சிகள் நிறைய இருந்ததால் அக்காட்சிகளில் நடிக்க கால அவகாசம் தேவைப்பட்டதால் இதன் ஷூட்டிங் தள்ளிப்போய் இருக்கிறது. இந்நிலையில் மகள் சவுந்தர்யா இயக்கத்தில் ‘கோச்சடையான்’ என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் ரஜினி. இதன் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்று முடிவு செய்யப்படாமல் இருந்தது. சமீபத்தில் பேட்டி அளித்த ரஜினிகாந்த், ‘கோச்சடையான் ஷூட்டிங்கில் அடுத்த மாதம் பங்கேற்கிறேன்’ என்றார்.
தற்போது உடல்நிலை முழுமையாக தேறியதை தொடர்ந்து ஷூட்டிங்கை உடனே வைத்துக்கொள்ள ரஜினி சம்மதித்தார். இதையடுத்து வரும் 19ம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஷூட்டிங் தொடங்குகிறது. ரஜினி அவரது தங்கையாக நடிக்கும் சினேகா நடிக்கும் காட்சிகள் படமாகிறது. இப்படத்தில் ஆதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் மிருகம், ஈரம் படங்களில் ஹீரோவாக நடித்தவர்
தற்போது உடல்நிலை முழுமையாக தேறியதை தொடர்ந்து ஷூட்டிங்கை உடனே வைத்துக்கொள்ள ரஜினி சம்மதித்தார். இதையடுத்து வரும் 19ம் தேதி ஏவி.எம். ஸ்டுடியோவில் உள்ள பிள்ளையார் கோயிலில் ஷூட்டிங் தொடங்குகிறது. ரஜினி அவரது தங்கையாக நடிக்கும் சினேகா நடிக்கும் காட்சிகள் படமாகிறது. இப்படத்தில் ஆதி முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இவர் மிருகம், ஈரம் படங்களில் ஹீரோவாக நடித்தவர்

No comments:
Post a Comment