![]() |
WD |
சென்னை ராயப்பேட்டை ஜானிஜான்கான் தெருவில் உள்ள நக்கீரன் அலுவலகத்திற்கு இன்று காலை 100க்கும் மேற்பட்ட அ.தி.மு.கவினர் சென்றனர். அப்போது, அம்மாவை பற்றி எப்படி அவதூறாக எழுதலாம் என்று கூறி சோடாபாட்டில், கல்கள், உருட்டுக்கட்டைகள் ஆகியவற்றால் நக்கீரன் அலுவலகத்தைக் கடுமையாகத் தாக்கி சேதப்படுத்தியதோடு, அங்கு நின்ற கார்கள், இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கினர்.
100க்கும் அதிகமான அ.தி.மு.கவினரும் ரவுடிகளும் இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து நடத்திக் கொண்டிக்க, பாதுகாப்பு என்ற பெயரில் வந்த போலீசார் வேடிக்கை பார்த்தபடியே நின்றனர். அ.தி.மு.க.வினரின் த்ôக்குதலைக் கண்டு நடுங்கி ஜானிஜான்கான் சாலையில் உள்ள கடைக்காரர்களும் பொதுமக்களும் கதவுகளை முடிக்கொண்டு உள்ளேயே இருந்தனர்.
தொடர்ந்து கற்களும், சோடாபாட்டில்களும் நக்கீரன் அலுவலகத்திற்குள் பறந்து வந்தபடியே இருந்தன. பத்திரிகையாளர்கள், தொலைக்காட்சியினர் ஆகியோர் களத்திற்கு நேரில் வ்ந்து செய்தி சேகரிக்கும்போது அவர்கள் முன்னிலையிலேயே அ.தி.மு.க.வினர் கற்களை வீசினர்.
போலீசார் அவர்களைப் பெயருக்குத் தடுத்தபோது, போலீசாரைத் தள்ளிவிட்டுவிடடு அ.தி.மு.க.வினர் தாக்குதலைத் தொடர்ந்தனர். நக்கீரன் அலுவலக்ததிற்குள் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த தொலைக்காட்சி, பத்திரிகையினரும் தாக்குதலை நேரடியாக எதிர்கொள்ளவேண்டியிருந்தது.
காவல்துறையினர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த, அ.தி.மு.கவின் ஒவ்வொரு அணியினரும் கூட்டம் கூட்டமாக வந்து தாக்குதலைத் தொடர்ந்தபடியே இருக்கிறார்கள். தற்போதும் வன்முறை வெறியாட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது.
வேளச்சேரி அ.தி.மு.க. எம்.எல்.ஏ அசோக் நக்கீரன் அலுவலக வாசலில் உள்ள கதவுக்கு வெளிபக்கமாக பூட்டு போட்டு, கதவின் மேல் தாக்குதல் நடத்தினார். அண்ணாசாலை அருகே அ.தி.மு.க.வினர் நக்கீரன் ஆசிரியரின் உருவபொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழகம் முழுவதும் நக்கீரன் பத்திரிகையை விற்பனை செய்யக்கூடாது என்று கடைகளில் அ.தி.மு.க.வினர் மிரட்டல் விடுத்தனர். மேலும் நக்கீரன் பத்திரிகையை பறிமுதல் செய்து எரித்துள்ளனர்.



No comments:
Post a Comment